Friday, June 24, 2011

நம்மோடும் தமிழரோடும்

பிறப்பாலே கவியரசர் அதனாலே தான் அவர்
பேசி நின்ற வார்த்தை யெல்லாம் கவிதையாச்சு
சிறப்பாகத் தமிழன்னை சிலரை மட்டும்
செருக்கோடு பெற்றுள்ளாள் மனம் விரும்பி
பொறுப்போடு இவர் தந்த கவிதைகளோ
பொதிகை மலை முச்சூடும் மணம் பரப்பும்
இருப்பார் நம் கவியரசர் கண்ணதாசன்
என்றென்றும் ந்ம்மோடும் தமிழரோடும்

Wednesday, June 22, 2011

வர மாட்டிரா

எல்லோரும் மனிதர்கள் தான் இந்தியர் தான்
யாரெனினும் ஊழல் செய்தால் மிருகம் தானே
வல்லார் பிரதமராம் மக்களிடம்
வாக்குக்கள் பெற்றுச் சென்றார் கடவுளராம்
நல்லார் நினைத்தாலும் இவர்களையே
நாட்டு மக்கள் கேள்வி கேட்க விட மாட்டாராம்
அல்லாவே ஏசுவே சிவனே எங்கள்
அவல நிலை கண்டீரா வர மாட்டீரா

Thursday, June 16, 2011

திக்கனைத்தும் சடைவீசி


திக்கனைத்தும் சடைவீசி நூலின் இரண்டாம் பதிப்பிற்கு செந்தமிழ் வாரிதி அண்ணன் செல்வகணபதி அவர்கள் அருளிச் செய்த அணிந்துரை

திக்கனைத்தும் சடைவீசி தொடர்ச்சி

Sunday, June 12, 2011

அன்பு மகள் குடும்பத்தோடு


எனது அன்பு மகள் வித்யாவோடும் முத்துக்குமாரோடும்

குவைத் தமிழ்ச்சங்கம்


6-06-2011 காலை விமானத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம் முத்துக்குமார் இல்லத்த்ற்கு நேரில் வந்து எங்களை வாழ்த்திய குவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அன்பர் ராஜா அவர்களோடு

நிகழ்வு மேடை


பொங்கு தமிழ் மன்றத் தலைவர் அன்பு முத்துக்குமார் அவர்களோடும் அய்யா ஆய்வுப் பேரறிவாளர் இரா.மதிவாணன் அய்யா அவர்களோடும்

பொங்கு தமிழ் மன்ற மேடை


குவைத் பொங்கு தமிழ் மன்ற நிகழ்வில் உரை நிகழ்த்துகின்றேன் அருகில் ஆய்வுப் பேரறிவாளர் அய்யா இரா.மதிவாணன் அவர்கள்

குவைத் பொங்கு தமிழ் மன்ற அன்பர்கள்


பொங்கு தமிழ் மன்றத் தலைவர் முத்துக்குமார் அவர்கள் செயல்ர் தமிழ்நாடன் அவர்கள் பொருளாளர் செந்தில் அவர்கள் திருக்குறள் வகுப்பு நடத்தும் சேது மாதவன் அவர்கள் பாபு என்ற அப்துல் ரெஹ்மான் அவர்கள் பிரபாகரன் அவர்கள் முருகன் அவர்கள் ராஜெந்திரன் அவர்கள் போற்றுதலுக்குரிய தேவநேயப் பாவாணர் அய்யாவின் சீடர் சிந்துச் சமவெளி ஆய்வுப் பெரியவர் பேராசிரியர் மதிவாணன் அய்யா அவர்கள்

மகளும் மருமகனும்


குவைத்தில் வாழும் எனது அண்ணன் மகள் சிவசங்கரியும் என் மீது உயிரையே வைத்திருக்கும் அன்பு மருமகன் முருகன் அவர்களும்

அன்பினால் என்னை ஆள்பவர்கள்


குவைத்தில் எனக்குக் கிடைத்த என் அன்பு மகள் வித்யாவும் அவளது துணைவர் அன்பும் மரியாதையும் நிறைந்த முத்துக்குமாரும் உலகம் பாராட்டப் போகின்ற மிகச் சிறந்த ஒவியர் எனது பேத்தி ஆதிரையும்

எனது பேரன் சின்னக்கவுண்டர் மகேஸ்வரன்

தலைக்கு மேல் வளர்ந்த பேரன் கெளதம்

அவினாசிப் பிள்ளைகள்

அன்பு செய்ய என்றே இறைவன் எனக்களித்த எனது மக்கள் ஆதவன் பஞ்சாலை கு.பூபதி திருமதி தமிழ்ச்செல்வி திரு கீர்த்திவாசன் திருமதி பானு

Saturday, June 11, 2011

விருதுகள்

தேடிப்போய் காத்திருந்து விருதுகளைத்
திறம் படவே வாங்குகின்றார் வெட்கமின்றி
கோடிகளில் புரளுகின்ற அமைச்சர்களோ
கொடுப்பதற்காய் சுகப் பெண்கள் வேண்டுகின்றார்
வாடி இந்த வாழ்க்கையில் வதை படவே
வந்துதித்த பெண்கள் மிகச் சீரழிந்தார்
ஆடி ஆடி விருதுகளை வாங்குகின்ற
ஆடவர்கள் ஊடகத்தில் ஆடுகின்றார்