Monday, January 21, 2013

68ம் ஆண்டில்

எதிர் வரும் ஜனவரி 27ம் நாளில் 68ம் அகவையில் அடி எடுத்து வைக்கின்றேன். நான் பிறந்தது தைப் பூசத் திருநாளில். இந்த ஆண்டு தைப் பூச த் திருநாளும் ஆங்கில நாளும் ஒன்று போல வருகின்றன். அந்த நாளில் வா மீத் முலை எறி கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் எனது கட்டுரைத் தொகுதிகளும் வரக் கூடும் என் எண்ணுகின்றேன். சிறு கதை தொகுப்பு தினமலரில் வந்த எனது முதலிரவு என்ற கதை கிடைக்காததால் தடைப் பட்டு நிற்கின்றது. யாரும் தினமலரின் அந்தக் கதையை வைத்திருப்பின் எனக்கு அனுப்பி உதவினால் நன்றி உடையவானாயிருப்பேன். அன்புடன் நெல்லைகண்ணன்

Tuesday, January 8, 2013

எள்ளுப் பெயரன் வெண்பாவும் பதில் வெண்பாவும்

இன்று காலை மின்னஞலில் எனது ஞானத்தந்தை பாரதியின் எள்ளுப் பெயரன் திரு நிரஞசன் அவர்கள் அவரது கவிதை நூலை நான் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு என்னைக் குறித்து ஒரு வெண்பாவும் அனுப்பியிருந்தார்.

கலைமகள் நாவில் கரை புரண்டோட
மலையருவி  பேச்சில் வழிய-நிலை பெற்று
எண்ணியே என்றும் இமிழும் திரு நெல்லை
கண்ணன் தமிழின் கடல்

நான் பதில் அனுப்பினேன்

எள்ளுமிள காய்ப்பொடியும் எள்ளெண்ணெ யும் சேர்த்து
அள்ளூற உண்ணுவதே ஆசையாம் - தெள்ளுதமிழ்ப்
பாரதியின் எள்ளுப் பெயரா அதனால் தான்
நீர்வந்து சேர்ந்தீரோ நெஞ்சு