Monday, April 29, 2013

சில உண்மைகள்

                                         கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

ஆனந்த விகடன் வார இதழில் முன்பொரு முறை கழுகார் பதில்களிலும் சென்ற வாரம் நானே கேள்வி நானே பதில் பகுதியிலும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பகுதியிலும் என்னைக் குறித்து ஏன் எழுதவில்லை என்று பல நூறு நண்பர்கள் தொலை பேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் மின்னஞ்ஞல் மூலமாகவும் என்னை வினவுகின்றனர்.

நான் என்ன செய்ய இயலும் எழுதுகின்றவர்களுக்கு எல்லாம் என்னை எப்படித் தெரிந்திருக்க முடியும். அவர்களுடன் பழகியவர்களைப் பற்றித் தானே அவர்கள் எழுத முடியும். எல்லா இதழ்களையும் ஏதோ ஒரு நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு  விமரிசித்து விடுகின்றேன். நண்பர்களுக்கு இது புரியவில்லை. இரண்டாவது நானும் ஒன்றும் அத்தனை சிறந்த பத்திரிக்கை ந்ண்பர்களை விட அறிவிற் சிறந்தவன் ஒன்றும் இல்லையே.

ஒரு பெரிய தமிழறிஞர் சொன்னார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று


                   காமராஜர் பற்றி உண்மை பேசுகின்றார் கருணாநிதி

இன்றைய சட்டப் பேரவையைக் குறிப்பிட பெரியவர் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜரின் சட்டப் பேரவை நாகரிகத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒரு மகிழ்ச்சி அவர் முதல்வராக இருந்த போது இருந்த சட்டப் பேரவையைப்
பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரால் எப்படி முடியும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பெண்ணை சேலையைக் கிழித்து வெறியாட்டம் ஆடியதும் மிகவும் மலினமான வார்த்தைகளால் அவரைத் திட்டியதும். அதை தமிழகத்தின் தலை சிரந்ததாகப் போற்றப் படும் ஒரு ஆங்கில் நாளிதழ் வெளியிட்டதும் தமிழகம் அறிந்த் ஒன்றுதானே.

பெருந்தலைவரை அவர் என்ன மெத்தப் படித்தவரா என்று மேடை தோறும் பேசியவர்கள் தானே இவர்கள்.பெருந்தலைவர் திருநெல்வேலிக் கூட்டத்தில் கேட்டார் நான் எங்கேயாவது படிச்சிருக்கேன்னு சொன்னேனா.பிறகு ஏன் அதையே சொல்றாங்க என்றார்.

Wednesday, April 10, 2013

அது அந்தக் காலம்

பள்ளிக் கூட விடைத்தாள்களும்  வினாத் தாள்களும் படுகின்ற பாடு கல்வி நமது நாட்டில் படுகின்ற பாட்டை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. யாரிடமும் முறையிட முடியாது. சேவை மனப்பான்மையோடு கல்விப் பணியாற்ற விரும்பாதவர்கள் அதிகப் பட்டுப் போகின்ற போது இப்படித் தான் ஆகும்.

சட்டப் பேரவையில் தேமுதிக திமுக இரண்டு கட்சிகளும் வெளியேற்றப் படுவதே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வர் பெரியவர் காமராஜரோ பக்தவத்சலமோ ஆர்.வெங்கட்ராமனோ  சி.சுப்ரமணியமோ பதில் சொல்லச் சளைக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பேசவே அனுமதிக்கப் படவில்லையென்றால் எதற்கு தேர்தல்களும்  செலவுகளும். புரியவில்லை.

பெரியவர் நெடுஞ்செழியன் பல வெளி நாட்டு அறிஞர்களின் குறிப்புகளை யெல்லாம் சட்டப் பேரவையில் எடுத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். பெருந்தலைவர் காமராஜர் அவரிடம் அது சரி நீங்க என்ன சொல்றீங்க அதைச் சொல்லுங்க என்ற போது சபை மட்டுமல்ல பெரியவர் நெடுஞ்செழியனும் சிரித்தார். வெளியிலிருந்த அண்ணா அதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தார். 

ராஜாஜி தனது தொகுதி மக்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த தோழர் ஜீவாவிடம் உலகம் குறித்துச் சிந்திக்க வேண்டிய நீங்கள் ஒரு தொகுதி மக்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே என்று கேலி செய்ய முற்பட்ட நேரம் . என்ன செய்வது அந்தத் தொகுதி மக்கள் அவர்களின் பிரதிநிதியாக என்னைத் தேர்ந்த்டுத்து அனுப்பி உள்ளனரே. நீங்கள் மக்களுக்கே சம்பந்தமில்லாமல் மேலவையின் வழியாக வந்தவர்
உங்களுக்கு என்ன கவலை என்ற போது ராஜாஜியும் அதைக் கேட்டு சிரித்தார்.

அது அந்தக் காலம்