Monday, June 24, 2013

கண்ணதாசக் கோமகனை

படைத்தவனும் தமிழருக்காய் படைத்தளித்தான்
பாடல் பேச்சு எழுத் தறிந்த பாவலனை
கிடைத்த எந்தப் பொருளையுமே பாடலாக்கும்
கேள்விகளின் நாயகனை செட்டி நாட்டைக்
கொடித்தலமாய் ஆக்கி புகழ் சேர்த்தவனை
கொற்றவனை கண்ணதாசக் கோமகனை
பனித் தமிழாள் நமக்களித்த் இந்த நாளைப்
பைந்தமிழர் எல்லோரும் போற்றி நிற்போம்

Sunday, June 23, 2013

வேண்டுகோள்

அன்புடையீர் வாழ்க தமிழுடன். யு  ட்யுபில் எனது அன்பு மகன் சுரேகா தனியாக  என் பெயரில் கணக்கு துவங்கியிருக்கின்ரார். அதன் பெயர்  the nellaikannan. இனி என் மீது அன்பு கொண்ட அன்பர்கள் சந்தா அனுப்பும் போது அந்த முகவ்ரிக்கு அனுப்பவும். நன்றி. என்றும் உங்கள் அன்பன் நெல்லைகண்ணன்

Tuesday, June 18, 2013

ஹோமியோ எனும் மாமருந்து.

சத்தியாக்கிரகம் எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையானது ஹோமியோபதி மருத்துவம் என்று காந்தியடிகள் எழுதுகின்றார்.  

கடந்த ஆறு ஆண்டு காலமாக் எனது குடும்பத்தில் நாங்கள் ஆங்கில மருத்துவரிடம் போவதில்லை. தமிழ் தெரிந்து கொண்ட என் மகள் கோவில்பட்டி விஜயலட்சுமி என்க்கு அவளுக்குத் தெரிந்த ஹோமியோபதி மருத்துவத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.

இன்று பல நண்பர்களுக்கு நான் மருந்துகள் தந்து அவர்கள் முக மலர்ச்சியோடு வந்து நோய் குணமானதைக் கூறும் போது மனம் நிறைந்து  போகின்றேன்.

குறிப்பாக் இரண்டு முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இன்று உங்கள் பார்வைக்கு தருகின்றேன்.

சிறூநீரகத்தில் கல்

இரண்டு மருந்துகள்

சமோமில்லா                பெல்லடொனா

இரண்டு மருந்துகளையும்  30     200     1 எம் என்ற விகிதத்தில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 30 போதுமானது  இரண்டு மாத்திரைகளையும் சாப்பாட்டிர்கு அரை மணி நேரம் முன்னதாக இல்லை பின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள் .

முதல் நாள் இரண்டு மாத்திரைகளையும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை முதலி ச்மோமில்லா  பின்னர் அரை மணி நேரம் கழித்து பெல்லடோனா என்று மாற்றி மாற்றி போட்டு வாருங்கள்.

மறுநாள் ஒரு மணி நேரத்திர்கு ஒரு முறை போட்டு வாருங்கள் ஒரே வாரத்தில் ஸ்கேன் செய்து பாருங்கள். கல் காணாமல் பொயிருக்கும்.


இன்னொன்று மூல நோய்  ந்க்ஸ்வாமிகா       சல்பர்


நக்ஸ்வாமிகாவையும் சல்பரையும் அதே அளவுகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு படுக்கப் போவதற்கு முன்னர் நக்ஸ்வாமிகாவையும். காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் சல்பரையும் போட்டு வாருங்கள். நோயின் கடுமை அதிகமிருந்தால் இவற்றையும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு வாருங்கள். ஒறே வாரத்தில் மூல நோய் போ ன இடமே தெரியாது.மாத்திரைகள் மிகக் குறைந்த விலை.

Friday, June 14, 2013

அரசியல் புரிகின்றதா

தே மு..தி.மு.க. விலிருந்து சட்டப் பேரவை உறுப்பினர் பாண்டியராஜனும் முதல்வரைச் சந்தித்து விட்டார். அவர் சொலுகின்றார் தொகுதி மக்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்வதற்காகவே முதல்வரைச் சந்தித்ததாக.இது மறைமுகமாக அ.தி.மு.க். அரசை அவமானப் படுத்துகின்ற வேலை என்பது ஏண் முதல்வர் அவர்களுக்குத் தெரிய மாட்டேனென்கின்றது.

அந்த அறிக்கையின் அல்லது நேர்காணலின் அர்த்தம் என்ன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகளில்  முதல்வர் அடிக்கடி சொல்லுகின்றாரே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடந்து கொள்கிறது என்று அந்தக் குற்றச்சாட்டுத் தானே முதல்வரின் ஆட்சியின் மீதும் வைக்கப் படுகிறது.தே.மு.தி.க வின்  இதற்கு முன்னால் முதல்வரைச் சந்தித்த ஆறு சட்டப் பேரவை உறுப்பினர்களின் அறிக்கைகளும் சொன்ன செய்தியும் அதுதானே.

மத்திய அரசு எதிர்க் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில்  இப்படி நடப்பதாகச் சொல்லுகின்ற் அதே குற்றச் சாட்டுத்தானே. எதிர்க் கட்சி வரிசையில் இருந்தால் எனது தொகுதி மக்களுக்கு நான் ஏதும் நன்மை செய்ய முடியாது என்கின்ற நிலையில்  என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக இந்த்ச் செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது என்று தே.மு.தி.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் செய்தியிலும் உள்ளது.

_________________________________________________________________________________



எப்படியாவது கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக்க பெரியவர் கருணாநிதி முயலுகின்றார். யாரைச் சரிக் கட்டியாவது. 68ல்  சட்டப் பேரவையில் கொவைக் கம்பன் பெரியவர் கருத்திருமன் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கனிமொழி என்று ஒரு பெண் குழந்தை ராயப் பேட்டை மருத்துவமனையிலே பிறந்திருக்கின்றதே என்று. கேட்ட பொழுது பெரியவர் கருணாநிதி தந்த பதில் கனிமொழி என் மகள். தர்மாம்பாள்(ராஜாத்தி அம்மாள்) அவளின் தாயார் என்று. கனிமொழியின் பிறப்பை அசிங்கப் படுத்தியவர்.

_______________________________________________________________________________


பெரியவர் அத்வானி என்ன ஜாதி குஜராத் முதல்வர் மோடி என்ன ஜாதி என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, June 12, 2013

அம்மாவும் அரசும்

அம்மா தந்த
பாட்டில்
பழக்கம்

அரசும்
தந்து
காத்து
நிற்கும்

Tuesday, June 11, 2013

தனி தினம் உண்டோ

உன்னைப்
பெற்றவள்
என்று
சொல்லமுடியாத
அறுவை
சிகிச்சை
அன்னையருக்கு

தனி
தினம்
உண்டோ

கம்பன் கழகங்கள்

பல ந்ண்பர்கள் ஏன் கம்பன் கழகங்களுக்கு வர மட்டேன் என்று என்னிடம் வினவுகின்றனர். அவர்கள் அழைத்தால் தானே வர இயலும்.

எங்கள் நீதியரசர் மகராஜ பிள்ளை கம்பன் அடிப்பொடி உண்மையான காந்தியவாதி சா.கணேசன் போன்ற் பெரியவர்கள் துவங்கி வைத்தது பாண்டிச்சேரியில் பெரியவர் புலவர் அருணகிரி போன்ற தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்  அவர்களின் பொறுப்பில் சென்னைக் கம்பன் கழகமும் காரைக்குடி கம்பன் கழகமும் இருந்தது. இப்போதோ அரசியல் சார்ந்தவர்கள் கையிலேயும் இந்தப் பொறுப்புகளை வைத்து தங்களின் சொந்த நலனுக்ககாக பயன் படுத்திக் கொள்பவர்கள் கையிலேயும் கம்பன் கழகங்கள் இருக்கின்றன. நான் என்ன செய்ய.விரித்து எழுத நான் விரும்பவில்லை.


என்னுடைய குறுந்தகடுகளை யாரோ நண்பர்கள் யு ட்யுபில்  ஏற்றி வைத்திருக்கின்றனர். அவர்கள் யார்  என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதனை ஆயிர்க் கண்க்கான தமிழர்கள் பார்க்கின்றனர் என்று தெரிகின்றது.
மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன் விளைவாக பல உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்க்கு இறைவன் அருளால் கிடைத்திருக்கின்றனர். நன்றி அந்த நண்பர்களுக்கு.

Friday, June 7, 2013

இயேசு பிரான்

கொள்ளை
அடிக்கும்
கல்வி
நிலையங்களின்
கூரைகள் தோறும்

கையை
விரித்த படி
இயேசு பிரான்

எனக்கொன்றும்
சம்பந்தமில்லை
என்று

Tuesday, June 4, 2013

ஒண்ணுமே புரியல்லே

கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்தவுடன் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகின்றது. கர்நாடகாவில் மழை ஆரம்பித்தவுடன் மேட்டூர்  அணைக்கு நீர் வர ஆரம்பித்து விட்டது. அறியாமையில் இவர்கள். மலையாளத்தார் என்றும் க்ன்னட வெறியர்கள் என்றும் புலம்புவர். இயற்கை நம்மை இணைத்து வைத்திருக்கின்ற்து. நாம் தான் பிரித்துப் பேசுகின்றோம். ம்லைகளை அழிக்காமல் இருந்திருந்தால், மரங்களை அரசியல் வாதிகள் வெட்டாமலிருந்திருந்தால் மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருக்கும் அடைத்து வைக்க அவசியமேயிருந்திருக்காது.

இப்படியெல்லாம் பேசுகின்ற நமது தலைவர்கள் இத்தனை சிவாலயங்கள் இருக்கும் இந்தத் தமிழகத்தில் கோவையில் ஒரு கர்நாடகத்துக்காரர் (வாசுதேவ்)வெள்ளியங்கிரி மலையைக் கைப் பற்றியிருக்கின்றார். அவரை வீரமணியோ தமிழினத் தலைவரோ வை.கோ. போன்றவர்களோ கேட்கவே மாட்டேனென்கின்றனரே ஏன்?


உள்துறை அமைச்சர் சுப்பராயனை உள்துறை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக டில்லித் தலைமை கேட்டதென்பதற்காக தனது முதலமைச்சர் பதவியைத் துறந்த ஒமந்தூரார் பின்னர் அரசியலுக்கே வரவில்லை. கட்சியின் எதிர்காலத்திற்காக தனது முதலமைச்சர் பதவியைத் துறந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

90 வயதிலேயும் தனது கட்சியை அவர் விருப்பப்படி தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க விரும்ப மாட்டேனென்கின்றாரே பெரியவர் கருணாநிதி.

Sunday, June 2, 2013

எல்லா ஊழலுக்கும் நேர்ந்ததே

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி இன்றைய தினகரன் நாளிதழின் இணைப்பில் தன் கணவர் குறித்து எழுதியுள்ளார். சுதந்திரமான குடும்பத்திலே பிறந்த தான் எப்படி சுஜாதாவின் கட்டுப் பாட்டிற்குள் இருந்தேன் என்றும். பல முறை தன் தாயின் மடியில் தலை வைத்து அழுது அவர்கள் வீட்டிற்கே வந்து விடுகின்றேன் என்று பல முறை தன் தாயிடம் அழுததையும் வேறு வழியின்றி அந்த வாழ்க்கைக்குப் பழகிப் போனதையும் தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் அன்பிருந்தும்  அதை வெளிப்படுத்தத் தெரியாதவராகத் தன் கணவர் இருந்ததைப் புரிந்து கொண்டதாயும் சொல்லியுள்ளார்.


கொஞ்சம் இதனைப் புரிந்து கொள்ள் இன்றைய தலைமுறையினர் முயன்றால் விவாகரத்து வழக்குகள் குறையக் கூடும்.

                                           ====================

ஐ.பி.எல். தலைவர் சுக்லா பதவியைத் துறந்துள்ளார். ஐ.சி.சியிலும் செயலரும் பொருளாளரும் பதவியைத் துறந்துள்ளனர். சீனிவாசன் துறக்கத் தயாராயில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் சிரந்தவர்களாக் விளங்கிய கபில் தேவ்  சுனில் கவாஸ்கர். வெங்சர்க்கார் பிஷன்சிங் பேடி சித்து என்று பல விளையாட்டு வீரர்கள் இருக்கும் போது இந்தத் தொழிலதிபர்கள் ஏன் அதில் பதவிகளில் அம்ருகின்றனர்.. பவார் பருக் அப்துல்லா அருன் ஜேட்லி லாலு.புரியவில்லை.
இந்த ஊழல் என்னவாகும் என்கின்ற இளைஞர்களுக்கு.எல்லா ஊழல்களுக்கும் என்ன நேருமோ அதுவே இந்த ஊழலுக்கும் நேரும்.கவலை வேண்டாம்.

2ஜி யில் கடைசி வரை மாறன் சகோதரர்கள் கைது செய்யப் படாததற்கு என்ன காரணம் என்று யாராவது சொலுங்களேன். அவர்கள் விமானக் கம்பெனி சிறப்பாக புதிய புதிய விமானங்களைப் பறக்க விடுகின்றது. சீனிவாசன் தயவில் அவர்களும் சன்ரைசர்ஸ் அணியைக் களமிறக்கினார்கள்.

சட்டங்களுக்கு கட்டுப் படாத தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தொழிலதிபர்களும் இருக்கும் நாட்டில் பைத்தியம் போல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் பயந்தும் கடவுளுக்கு அஞ்சியும் வாழும் மக்களின் மத்தியில் அதிகக் கோபம் அடைந்தவன் துப்பாக்கியைத் தூக்குகின்றான்.

அவனைத் தீவிரவாதி என்கின்றனர்.

கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்கின்றான் பெரும்புலவன் பாரதி..

கவலை எதற்கு அவனுக்கும்தான் சிலை நாடாளுமன்றத்திற்குள் வைத்து விட்டோமே,

Saturday, June 1, 2013

என்ன செய்ய

ஒரு முறை ஒரு மிகப் பெரிய கவிஞர் பாரதி விதவைகளைப் பற்றிச் சிந்திக்கவெயில்லை என்று நான் பாரதியைப் பற்றி யாதுமாகி நின்றாய் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழிலேயே எழுதினார். காசியில் விதவைப் பெண்களாக்கப் படுகின்ற கொடுமை கண்டுதான் அவன் பூணூலை அறுத்தெறிந்தான். முண்டாசும் மீசையும் வந்ததே அதனால் தான். பெண்களை ருதுவாவதற்கு முன்னால் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்றான். திருமணம் செய்த பெண் அந்தக் கணவன் பிடிக்கவில்லையென்றால் அந்தக் கணமே விலகி வாழ அனுமதி என்றான். பெண்கள் திருமணமே வேண்டாம் என்கின்றார்களா அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதி என்றான். அவள் ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்க விரும்பினால் அதைத் தடுக்காதே என்றான். ஆண்களோ பெண்களோ விதவைகளாகி விட்டால்  அவர்கள் வயதுக்கேற்ற பெண்களையும் ஆன்களையும் திருமனம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்குள் உடல் இச்சை தீரும் படி ஆண்டவன் மனித் உயிர்களைப் படைக்கவில்லை என்றான்.

பாரதியின் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்கின்ற வரியை வாலி அசிங்கப் படுத்தியுள்ளார்

திரைப் படக் கவிஞர் பா. விஜய் அவர்கள் நக்கீரன் வார இதழில் ஒரு தொடர் எழுதினார் . அந்தத் தொடரில் அவர் விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்று ம்கிஷாசுரமர்த்தினியை வதம் செய்தனர் என்று எழுதினார்.

என்ன செய்ய.