Monday, April 25, 2011

பாபா உம்மை

தாயாக நிற்கின்றார் பாபா எங்கும்
தனியாக இல்லை பல கோடியாக
வாயார அவர் புகழைப் பரப்புகின்றார்
வாழுகின்றார் உலகமெங்கும் பக்தியோடு
சேயாக அவர் மீண்டும் வருவேன் என்றே
செய்தி சொல்லிச் சென்றுள்ளார் கவலை வேண்டாம்
போய்த் தொண்டு செய்து நிற்பீர் பாபா உம்மை
புகழுக்கு உரியவராய் ஆக்கி நிற்பார்

0 மறுமொழிகள்: