Sunday, January 15, 2012

அருள வேண்டும்

ஆங்கிலத்தில் பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லும்
அறியாத தமிழர்களை என்ன சொல்வேன்
பூங்குவளைத் தமிழ் இருக்க வெட்கமின்றி
புரியாத மொழியினிலே வாழ்த்துகின்றார்
தாங்கள் தான் மிகப் பெரிய அறிஞரென்று
தங்களுக்குத் தாங்களே நினைக்கின்றார் காண்
ஏங்கி நின்றேன் தமிழே என் தாயே நீ தான்
இக் கொடுமைதனைத் தடுத்து அருள வேண்டும்

1 மறுமொழிகள்:

said...

உண்மைதான் அய்யா!

Happy pongal எனும்போது கோபம் சுர்ரென்று ஏறுகிறது.