Tuesday, June 26, 2012

கையெடுத்து வணங்குகிறார் அய்யா என்று
கண்களிலே நீர் மல்க புல்லரிப்பார்
பைய நந்தம் கால்களிலே வீழ்ந்திடுவார்
பண்புகளால் நிறைந்தாற் போல் பசப்பிடுவார்
வையமிதில் வாழ்வதற்காய் இவர்கள் காட்டும்
வடிவான நடிப்பிதனைப் பார்க்கும் போது
பொய்யர் இவர் தம்மையுமே நேசிக்கின்ற
பொறுப்பளித்த இறைவனையே போற்றி நிற்பேன்

0 மறுமொழிகள்: