Saturday, August 11, 2012

கடவுளையே நம்புவோம்

பேரூந்து ஒட்டையில் குழந்தை ஒருத்தி விழுந்து சீயோன் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அதற்கு வருத்தம் கொள்ளுகின்றார்.
ஆனால் அவரது மகனின் மரணத்திற்காக அவர் படித்த கல்விக் கூடத்தின் மீது அவர் வழக்குப் போட்டிருக்கின்றார்.

எல்லாப் பள்ளிப் பேருந்துகளையும் உடனே அதிகாரிகள் சோதனையிடத் தொடங்கி விட்டார்கள். அவர்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஏற்கனவெ இவர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கிய பேரூந்துகள் அவை என்பதனைக் கூட மக்கள் ம்றந்திருப்பார்கள் என்கின்ற ஈனத்தனம்.

எல்லா ஊடகங்களும் இன்னும் ஒரிரு நாள் இது குறித்து எழுதக் கூடும். அதன்பின்னர் அவர்களுக்கு வேறு பணிகள் வந்து விடும். இதுவும் கும்பகோணம் தீ விபத்தைப் போல கிடப்பில் போடப் படும்.இன்று உச்சநீதி மன்றம் உத்தரவிடுகின்றது 6 மாத காலத்திற்குள் கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கச் சொல்லி.

இதே தான் இந்தப் பேருந்து வழக்கிலும் ந்டை பெறப் போகின்றது.

படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான் என்று பாரதி சொன்னான்.

எந்த அதிகாரியோ அரசு ஊழியரோ தவறு செய்தால் கேட்க முடியாது. உடனே அவர் எங்கள் ஜாதி அவர் மீது பழி போட அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கூக்குரல் சுவரொட்டிகள். எங்கள் ஜாதியில் இப்படி ஒரு மக்கள் விரோதி இருப்பதனை அனுமதியோம் என்று யாரேனும் போராட முன் வருகின்றார்களா அன்றுதான் இதற்கு முடிவு வரும். யார் முடிவு கட்டுவது கடவுளையே ந்ம்புவோம்.

அப்துல் கலாம் அவர்கள் இந்த முறையும் எல்லோரும் சொன்னால் நான் குடியரசுத் தலைவர் ஆவேன் என்று விரும்பியது எப்படிச் சரி.

அரசியல் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அன்னா ஹசாரே அரசியல் கட்சி துவக்குகின்றார்.

புரிகின்றது. பதவி ஆசைகள் எல்லோரையும் படுத்துகின்றது. பதவியை துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு வள்ளலார் திருமடத்திற்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி விட்டு அரசியல் பக்கமே திரும்பாது வாழ்ந்து மறைந்த பெரியவர் ஒமந்தூரார் நினைவிலேயே உள்ளார்.

1 மறுமொழிகள்:

said...

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...
பகிர்வுக்கு நன்றி ஐயா ...