Saturday, July 13, 2013

உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி

உச்ச்நீதி மன்றம் மறுநாளே இன்னொரு தீர்ப்பையும் தந்துள்ளது. சிறையில் இருந்தாலே அவர்கள் தேர்தலிலே போட்டியிடக் கூடாது என்று. நமது அரசியல் வாதிகள் பதிலைக் காணோமே என்று பார்த்தேன்.

முதன் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது தான் ஆச்சரியமளிக்கின்றது.சட்ட அமைச்சர் கபில் சிபல் எல்லா அரசியல் கட்சிகளையும் கலந்துதான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.
நமது அசோக ஸ்தூபியில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றம் நீதித் துறை செய்தி ஊடகங்கள் நாட்டு மக்கள் என்று.

பாண்டிச்சேரிய்ல் ஒரு  15 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னேன் ஒரு இலக்கிய நிகழ்வில் இந்தச் சிங்கங்களை அச்சடிக்கின்ற பொழுது ஒரு சிங்கம் மறைந்து போகும் அதுதான் இந்திய மக்களைக் குறிக்கின்ற் சிங்கம்  என்று.

கிரிமினல்கள் உதவியில்தான் இந்நாட்டு அரசியல் நடக்கின்றது என்பதனை நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பெருமையோடு ஒத்துக் கொள்வதனைப் பார்க்கின்ற போது உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கின்றது. இத்தனை வெளிப்படையாக எங்கள் மானம் சூடு சுரணையற்ற தலைவர்களை எங்கள் முன் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வைத்ததற்காக.

0 மறுமொழிகள்: