Friday, October 23, 2009

சூர சம்காரம்

சூரர்கள் அழிக்கும் கூட்டத்திற்குள்
சூரர்கள் ஆயிரம் இருக்கின்றாரே
நீரறிவீரே நெற்றிக் கண்ணின்
நேர்மைப் பொறியில் உருவானவரே
பேரறிவாளா இவரை அழித்தல்
பெருமை இல்லை என நினைத்தீரோ
ஊரகம் முழுதும் சேவல் மயிலாய்
உரு மாறிடும் எனும் அச்சம் தானோ

0 மறுமொழிகள்: