Tuesday, October 20, 2009

திருவடி கிடந்தேன்

ஆறுதல் தேடி வருபவர் தமக்கு
ஆறுதல் தருவதில் மகிழ்ந்தேன்
அழுகையில் விழுந்து அரற்றுவார் தமக்கு
அழுகையின் மகத்துவம் உரைத்தேன்
தேறுதல் தேடி வருபவர் தமக்குத்
தேறுதல் தருவதில் தெளிந்தேன்
திசைகளைத் தேடியே திணறுவார் தமக்குத்
திசைகளை உணர்த்தியே உணர்ந்தேன்
மாறிடும் உலகினில் நல்லன எல்லாம்
மற்றவர்க்கு உரைத்திடப் படைத்தான்
மனமெலாம் உறையும் எனதருங் கடவுள்
மகிழ்ந்தவன் திருவடி கிடந்தேன்

0 மறுமொழிகள்: