Saturday, December 5, 2009

வணங்கி நிற்போம் விவேகாநந்தர்

அழுதழுது துன்பத்தில் பெண்கள் வாழும்
அவ் வீடும் அந் நாடும் அழிந்தொழியும்
பழுதற்ற தாய்மை யென்று பெண்ணைப் போற்றும்
பாரதத்தில் பிறந்தீரே இதை உணர்வீர்
தொழுவதற்கு தாயன்றி வேறோர் தெய்வம்
தூயவரே இல்லையென்று வேதம் சொல்லும்
விழுதாகி அனைத்தையுமே தாங்கி நிற்கும்
வீரர் அவர் அவர்களையே வணங்கி நிற்போம்

0 மறுமொழிகள்: