Monday, March 7, 2011

தமிழ்நாடு இனி பொழச்சு வாழும்

தொண்ணித்தஞ்சு வச்சுக்கிட்டு ஆண்ட போது
தோண்வில்லை அய்யாவுக்குத் துன்பம் எல்லாம்
எண்ணிப் பாத்துக் கணக்குப் போட்டு எடமும் கேட்டா
எரிச்சலோடு புளிச்சல் வருது அய்யோ அய்யோ
க்ண்ணியமேயில்லை என்று கத்றுகின்றார் அந்தக்
காங்கிரசார் வேண்டாமென்று புலம்புகின்றார்
தன் கணக்கில் அமைச்சரகளாய் ஆறு பேரை
தான் வாங்கியிருந்த தெல்லாம் நியாயம் தானோ

புண்ணியமாய்ப் போச்சு அய்யா ஆண்டவன் தான்
புத்தியினைத் தந்து (உ)ள்ளார் காங்கிர சிறகு
அண்ணமாருக்கு இப்போ தான் வெளங்கிருக்கு இவர்
ஆண்டதிலே கண்ட சுகம் புரிஞ்சிருக்கு
மன்னவராய் இருப்பதற்கு மற்றவரின்
மடத்தனத்தை கையாண்ட சிறுமை யெல்லாம்
நல்ல வேளை ஆண்டவனும் காப்பாத்திட்டான்
நாடு தமிழ் நாடு இனி பொழச்சு வாழும்

0 மறுமொழிகள்: