Sunday, May 8, 2011

தாய்க்கு ஒரு தினமாம்

தாய்க்காக ஒரு தினமாம் இந்தக் கூத்தில்
தமிழர்களும் சேர்ந்துள்ளார் என்ன செய்ய
சேய்க்காக முந்நூறு நாள் சுமந்து தான்
சிரமங்கள் பட்டாலும் அது பொறுத்து
வாய்ப்பாக பெற்றெடுத்து வளர்த்து நல்ல
வாழ்க்கைக்கு வழி செய்த தாயவட்கு
ஏய்ப்பாரைப் போல ஒரு நாளைத் தரும்
இக் கேடு மேல் நாடு தந்த கேடு

0 மறுமொழிகள்: