Friday, May 27, 2011

நேரு நினைவு நாள்

உலகெங்கும் பாரதத்தை உயர்த்திட வாழ்ந்து வென்றான்
கலகங்கள் இல்லா நாடாய்க் காத்திட ஆசை கொண்டான்
அலகினில் கோதுமைக் கதிரின் அழகிய புறாவாய் ஆனான்
பலப் பல நாடு போற்ற பண்டிதன் அமைதி காத்தான்
உளமெலாம் நல்லதொன்றே உதித்திட உலகை வென்றான்
உயர் குணம் கொண்ட வேந்தன் உத்தமர் காந்தி சீடன்
அளவில்லாப் பெருமை கொண்ட அன்பராம் நேரு மாமா
அகிலத்துக் குழந்தைக் கெல்லாம் அன்பினைத் தந்த சீமான்

0 மறுமொழிகள்: