Friday, July 15, 2011

காமாராஜர் பிறந்த நன்னாள்

ஏழைகளைக் காப்பதற்காய் பிறந்த நல்லோர்
எல்லோர்க்கும் கல்வி தந்த இனிய நல்லோர்
வாழையடி வாழையென காந்தி அண்ணல்
வழி நடந்து தமிழருக்குப் பெருமை சேர்த்தோர்
கோழைத்தனம் இல்லாமல் தாய் நாட்டிற்காய்
கொடுஞ்சிறையில் ஆறாண்டு இருந்த வல்லோர்
பேழையாம் கல்வியினை அள்ளித் தந்த
பெருஞ்செல்வர் காமராஜர் பிறந்த நன்னாள்

0 மறுமொழிகள்: