Sunday, November 20, 2011

தாயருளால் என்னைக் காப்பாய்

குணமாக்கி எனைக் கொல்ல வேண்டும் அய்யா
கோமகனே உன் பாதம் பணிந்தே நின்றேன்
இரணமாக்கிக் கொல்கின்றார் உற்றார் நண்பர்
இரவெனினும் பகலெனினும் உந்தன் துணை
பிணமாக்கிப் பார்க்கின்றார் நிதமும் என்னை
பேணி நிற்கும் அன்பாலே வந்த வினை
கணமேனும் உனை மறவா அருளைத் தந்த
கண்ணுதலே தாயருளால் என்னைக் காப்பாய்

1 மறுமொழிகள்:

said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in