Wednesday, November 30, 2011

இறைவன் துணை

புரியாமல் வாழுகின்றேன் அன்பை நம்பி
போற்றுவோர் தூற்றுவோர் அனைவரிடம்
அறியாமல் வாழுகின்றேன் என்றே பலர்
ஆதங்கம் கொள்கின்றார் என்னிடத்தில்
சிறியாராய் அவர் நடந்தால் எனக்கு என்ன
சிந்தித்தே முறையாய்த் தான் வாழுகின்றேன்
வறியானாய் ஆனாலும் எந்தனது
வழி முறைகள் மாறாது இறைவன் துணை

0 மறுமொழிகள்: