Friday, April 13, 2012

அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் அன்புடன் நெல்லைக்கண்ணன்


இன்று காலை 18-04-2012 குமுதம் வார இதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 94ம் பக்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் வெளியாகியிருந்தன.
முதல் கவிதையைப் பார்த்தவுடனேயே அதிர்ந்து போனேன்.

எனது காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையை மாற்றி எழுதியிருக்கின்றார்.

எனது கவிதை

நீ
கோலம்
போட
வருவதைப்
பார்க்கவே
சூரியன்
வருகின்றான்

இவர்கள்
அதைக்
காலை
என்கின்றார்கள்

இன்னொரு
முறை
பார்த்தால் தான்
மறைவேன்
என்கின்றான்

அதை
மாலை
என்கின்றார்கள்


நா.முத்துக்குமார் இதனை மிகச் சாமர்த்தியமாக எழுதியிருக்கின்றார்.

உன்னைப் பார்க்க
சூரியன் வருவதை
காலை என்கின்றோம்

உன்னைப் பார்த்துச்
சூரியன் விழுவதை
மாலை என்கின்றோம்

3 மறுமொழிகள்:

said...

Anbirkuriya Na.Muthukumar Avarkaluku,

Thaangal Thayavu seithu niraya padiyungal. Piragu kavithai ezthutha thodangungal.

Appadiyum vara villai endral vittu vidungal.

Thaangal seitha kariyan yemaku migavum avamanamaga irukindrathu.

Thai mozhiyai viyabaram akkatheergal.

Endrum Andudan
Deiveegarajan Katturaja

said...

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனிதனையே கடிக்கிறார்களே! அய்யா உங்களுக்கே இந்த நிலையென்றால்?

said...

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனிதனையே கடிக்கிறார்களே! அய்யா உங்களுக்கே இந்த நிலையென்றால்?