Sunday, August 12, 2012

முடிவெடுக்க வேண்டும்

கிரானைட் குவாரிகளின் கொள்ளையைக் கண்டு பிடித்தனாலேயே சகாயம் மாற்றப் பட்டிருக்கின்றார் என்று நாங்கள் சொன்னோம். இன்று அது வெளிச்சமாகியுள்ளது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் தான் கண்டு பிடித்திருக்கின்றார். எதிர்க்கட்சி ஒன்றும் சொல்லி விடவில்லை. ஏனெனில்
அவர்களுக்குத் தெரியும்.அவர்களுக்கு நெருக்கமாக இருந்த திரைப் படப் பாடலாசிரியரின் நெருங்கிய ந்ண்பர்தான் முதல்வர் இதில். இவர்கள் ஒத்தக்கடை ஆனைமலையை உடைத்து விற்று விட முனைந்தார்கள். இத்தனை பெரிய கொள்ளையை தெரியாமலா இருந்தார்கள் ந்மது அரசு அதிகாரிகள். அவர்களின் உதவியின்றி இது எப்படி ந்டந்திருக்கும். பசிக்குத் திருடுகின்ற ஏழைகளை உடனே கைது செய்து உள்ளே வைத்த இந்த அதிகாரிகள் இதனை எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பணம் பணம் எப்படியாவது பணம் சேர்த்து விட வேண்டும். தலைவர்கள் காட்டுகின்ற வழி அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் ஆசையைத் தூண்டி விட்டது. எப்படித் தப்பாகச் சம்பாதித்தாலும் கைது வழக்கு என்று அது நீடிக்கும். பிறகு மக்கள் மறந்து போவார்கள். அந்த சம்பாத்தியத்தோடு இந்த நாட்டிலேயே வாழலாம் கோயிலில் முதல் மரியாதையொடும் சமூகத்தில் அந்தஸ்தோடும்.

அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனோடு
தீதின்றி வந்த பொருள்.

இது திருக்குறள் என்பதைக் கூட யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

வள்ளுவருக்குச் சிலைகள் கோட்டம். மேடைகள் தோறும் குறட்பாக்கள்.
இதனை விட வள்ளுவரை எந்த வழியில் அவமானப் படுத்தி விட முடியும்.

இந்தக் கொள்ளையருக்கு இந்த ஆட்சியிலும் ஆட்கள் உண்டு. என்ன செய்ய.

இன்றைக்குப் போய் சோதனைகள் போடும் இந்த அதிகாரிகள் பலர் இதற்குக் காரணம் இவர்களை என்ன் செய்யப் போகின்றது அரசுகள்.

நல்லவராக இருந்தால் சகாயம் மாற்றப் படுகின்றார்.

அதுல் மிஸ்ரா நல்ல வேளை இவரும் ச்காயம் போன்றவரே.

இவர் மதுரை ஆட்சித் தலைவராக வந்த உடனே சிவபெருமானின் அவதாரம் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற நித்தியானந்தன் இவர் எனது ப்க்தர்
திருவண்ணாமலையில் பல முறை எனது ஆசிரமத்தில் வந்து ஆசி வாங்கிச் செல்வார் என்ற உடனேயே உடனடியாக அதுல் மிஸ்ரா அதனை ம்றுத்தார். ஆனால் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரான் தன்னைப் பற்றியே பொய் சொன்ன அந்த நித்தியானந்தாவின் மீது ந்டவடிக்கை எடுத்து தன் பக்க்த்தைக் காப்பாற்றியிருக்க வேண்டும்  ஏன் செய்ய வில்லை புரியவில்லை.
கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நித்தியானந்தாவிற்காக ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற் நீதிபதியே வழக்காடுகின்றார். நீதி உயிர் வாழுமா.

ஒய்வு பெற்ற நீதிபதிகள் வழக்குரைக்க வந்தால் நீதி என்னாகும். அரசுகள் இதைத் தடுக்காதா.

ம்துரை ஆதீனகர்த்தர் உயிர் ஆபத்தில் இருக்கின்றார் என்பதனை பல முறை சொல்லியும் அரசு நடவ்டிக்கை எடுக்க மறுக்கின்றதே என்ன காரணம்
யாருக்குப் புரிகின்றது.

சொக்கநாதரும் அங்கயற்கண்ணி அம்மையும் தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும்.

1 மறுமொழிகள்:

said...

நல்லதொரு குறளை ஒப்பிட்டு விளக்கியதற்கு நன்றி... பாராட்டுக்கள் ஐயா ...