Monday, August 27, 2012

பெண்கள் முடிவெடுப்பார்களா

எங்கு பார்க்கினும் ஊழல் பேச்சுக்கள். சுரங்கம் கிரானைட்.தொலை பேசித் துறை. நிலக்கரி என்று.

கணவனின் மீது விழுந்து விட்ட பழியைத் துடைப்பதற்காக ஒரு அரசனை உயிர் துறக்கச் செய்தாள் கண்ணகி.

இன்று நமது பெண்களில் எத்தனை பேர் வருமானத்திற்கு அதிகமாக ஊதியத்திற்கு அதிகமாக தனது வாழ்க்கைத் துணை பணமோ பொருளோ கொண்டு வரும் போது இது ஏது. எப்படி உங்களிடம் இத்தனைப் பணம் வந்தது என்று கேள்வி எழுப்புகின்றனரா.. இது எத்தனைப் பேருடைய வயிற்றெரிச்ச்லைக் கொட்டிக் கொண்டு வந்திருக்கும். எத்தனை பேரின் உழைப்பு வஞகமாகக் கொள்ளையிடப் பட்டிருக்கும். இதனை நான் வாங்கி இந்தக் குடும்பத்திற்கு செலவழிப்பேன் என்றால் அது என் குழந்தைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் பாதிக்கும். நீங்கள் பிடி படுகின்ற போது நானும் என் குழந்தைகளும் எந்த முகத்தோடு இந்த மக்கள் மத்தியில் நடப்போம் என்று கேட்கின்றனர்.

இந்தப் பணத்தை நான் வாங்கி ஆடம்பர வாழ்க்கை நடத்தினால் வயிற்றுப் பாட்டிற்காகவும் பெருந்தனவந்தர்களால் விபச்சாரத்தில் தள்ளப் பட்ட பெண்களைப் போல் அல்ல விரும்பியே விபச்சாரத்தால் ஈடுபடும் பெண்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று ஆடவர்களைக் கேட்டு அவர்களோடு வாழ மறுத்தார்கள் என்றால் ஊழல் வெல்லுமா.

வாழ்க்கைத் துணை நலம் என்று வள்ளுவன் போற்றிய பெண்கள் முடிவெடுப்பார்களா?

1 மறுமொழிகள்:

said...

யோசிக்க வைக்கும் நல்ல பல கருத்துக்கள் சார்...

நன்றி... வாழ்த்துக்கள்...