Friday, August 31, 2012

குழந்தைகளை வாழ விடுங்கள்


பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.காரணம் ஆசிரியர்களின் கடும்  நடவடிக்கைகள். பள்ளியின் அடக்குமுறை நடவடிக்கைகள்.

காரணம் யார்.நெல்லை மொழியிலே சொன்னால் சீமையில இல்லாத் படிப்பு.
ஆயிரக் கணக்கிலே செலவழித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர். வெளிநாடுகளுக்கு சேவை செய்ய இங்கே அவர்களைத் தயார் செய்கின்றனர்.

பிள்ளைகள் உறங்க வேண்டிய வயதிலே உறங்க அனுமதிக்கப் படுகின்றனரா.
நன்கு உணவருந்துகின்றார்களா. நல்ல உணவருந்துகின்றார்களா. ஒடியாடி
விளையாடுகின்றனரா. அவர்கள் வயதுக்குரிய கல்வியைக் கற்கின்றார்களா.

காலையிலே ஐந்து மணிக்கு எழுப்பப் பட்டு ஏழு மணிக்கு பள்ளி வாகனங்களுக்காக தூங்கு மூஞ்சியாய் காத்து நிற்கின்ற குழந்தைகளைப் பார்க்கையில் இந்தப் பெற்றோர்களை என்ன செய்யலாம் என்று தோன்றுகின்றது.

எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும் என்பது பெற்றோர்களின் ஆசை.
ஆயிரக் கணக்கில் வாங்கிய பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்குக் கட்டளை
யிடுகின்றது. எப்படியாவது படிக்க வையுங்கள் என்று. கண்டிப்பு என்கின்ற
பெயரில் மனித உரிமை மீறல்கள். தற்கொலைகள் தொடரத் தானே செய்யும்.

விடுமுறை என்பது குழந்தைகள் மனிதர்களைப் பார்க்க பறவைகளைப் பார்க்க
நீர் நிலைகளை அருவியைக் கடலை குளத்தை ஏரியைப் பார்க்க ஆறுகளைப்
பார்க்க. அனுமதி உண்டா.

விடுமுறை தினங்கள் அடுத்த வகுப்பிற்கு தயார் செய்யப் படுகின்றனர்.
உங்களுக்கு எல்லாச் சாபங்களையும் நான் தருகின்றேன்.

மதிப்புக்குரியவனாகவோ மதிப்புக்குரியவளாகவோ பிள்ளைகள் வளர
வேண்டும் என எந்தப் பெற்றோர் கருதுகின்றனர்.

மனிதப் பண்புகளோடு வளர வேண்டும் என எத்தனைப் பெற்றோர் கருதுகின்றனர். அடக்குமுறை   ஆசை வெறி மண்டையில் எல்லாவற்றை
யும் திணித்து விடச் செய்யும் கொலை வெறி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் அரசு அனைவரும் குழந்தைகளின் கொடிய சாபத்திற்காளாகின்றீர்கள்.

கொடுமையான வழி முறைகளிலே கற்பிக்கப் பட்டு பல்லாயிரக் கண்க்கிலே சம்பாதித்து திருமணம் செய்தால் வாழ்கின்றார்க்ளா சிலரைத் த்விர.

குழந்தைகள் உங்களுக்குப் பிறந்த தனாலேயே அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றீர்களே.

அவர்களை மனிதர்கள் என்று உணருங்கள்.

அதை உணராததனால்தான் மொத்தமாகவே இழந்து விடுகின்றீர்கள்.
பள்ளிகளை ஆசிரியர்களைக் குறை சொல்லாதீர்கள்.

மாநகராட்சிப் பள்ளிகளிலே படிக்கின்ற குழந்தைகளில் பலர் மிகப் பெரிய
வெற்றியினைப் பெறுகின்றனர். பெரிய பொறுப்புக்ளுக்கு வருகின்றனர்.

குழந்தைகளாக வாழ விடுங்கள். கொல்லாதீர்கள்.

2 மறுமொழிகள்:

said...

உன்மை உன்மை இன்னும் ஆயிரம் இடத்தில் நீங்கள் எடுத்து கூறினாலும் இந்த தமிழக மக்கள் மண்டையில் பதியாது

said...

பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...