Friday, November 30, 2012

இவர்கள்

பலர் என்னை விழுந்து வண்ங்குகின்றனர். சொன்னாலும் கேட்பதில்லை. அதில் சிலர் தீடீரென்று வணங்குவதை நிறுத்தி விடுகின்றனர். மனம் நிம்மதி பெறுகின்றது.

ஒரு கவிஞர் இப்படித்தான் என்னை அவரும் நானும் கலந்து கொள்ளும் விழாக்களிலெல்லாம் விழுந்து வணங்குவார்.அவ்ர் திரைபடத்தில் பாட்டு எழுதுவதால் ஒவ்வொரு ஊரிலும் சில நண்பர்கள் அவருக்குக் கிடைத்து விட்டனர்.

அண்மையில் எங்கள் மாவட்டத்தில் ஒரு நிகழ்விற்கு வந்திருந்தார். அவரது புதிய நண்பர்கள் மூன்று பேர் உடன் வந்திருந்தனர். தம்பி என்று நான் வாய் நிறைய அழைப்பேன். அவரும் எங்கள் ஊர் வழக்கத்தில் அண்ணாச்சி என்று வாய் நிறைய அழைப்பார். அந்த மேடையில்  அவர் என்னை விழுந்து வணங்கவில்லை. நான் மன நிறைவடைந்தேன்.

பிறகு பெரியவர்கள் சொன்ன செய்தி தான் என்க்கு அதிர்ச்சியைத் தந்தது. அவர்களிடம் அவர் ஏதோ  அன்றுதான் என்னோடு ஒரே மேடையில் ஏறினாற் போலும் நான் அவரை அன்பொழுக தம்பி என்று அழைத்ததிலும் அவர் தலையைத் தடவிக் கொடுத்ததிலும் அவர் வியப்படைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அதில் என்ன கொடுமை என்றால் அந்தப் பெரியவர்கள் அனைவரிடமும் எனது நிகழ்வுகளின் ஒளிக் குறுந்தகடுகள் அனைத்தும் உண்டு. அவர்களில் பலர் நெல்லையில் நடந்த எனது விழாக்
க்ளில் பங்கேற்றவர்கள். இந்தத் திரைப்படக் கவிஞர் என்னருகில் இருந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள். எனது காலில் விழுந்து வணங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரில் கண்டவர்கள். அவர்கள் என்னிடம் தங்களது வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். என்க்கு ஒன்றும் புரியவில்லை. நான் அன்பு மயமானவன்.

இன்னும் சிலர் நம்மிடம் மிகுந்த அன்பு பூண்டிருப்பதாக சிறப்பாக நடிப்பர்.
அது பொறுதுக் கொள்ள முடியாத அளவிற்கு நம்மை துன்புறுத்தும். பெரிய
பணக்காரர்களாக வேறு இருப்பர். அவர்கள் ந்ம்மோடு வந்து அமர்ந்து கொள்வதனாலேயே தரமானவர்கள் நல்லவர்கள் ந்ல்ல தமிழறிந்தவர்கள் நம் அருகில் வர முடியாமல் தவிப்பார்கள். எனது நல்ல நண்பர் ஒருவர் ஒரு சிறப்பான வழியைச் சொன்னார். இன்று நிம்மதியாக இருக்கின்றேன்.

ஆமாம் என் மீது உயிரையே வைத்திருப்பதாகவும் என்ன வேண்டுமானாலும் எனக்குச் செய்ய உறுதி பூண்டிருப்பதாகவும் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நண்பர்களிடம் ஒரு அவசரத் தேவை கொஞசம் பண உத்வி வேண்டும் என்று கேட்டவுடன் அவர்கள் என்மீது வைத்திருந்த உயிரை உடனே எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார்கள். நிம்மதி.

2 மறுமொழிகள்:

said...

ஹா.. ஹா.. சுவாரஸ்யம்...

said...

தாங்கள் வணங்கத்தக்கவர்தான்.



நீங்கள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்தான்.