Wednesday, February 13, 2013

ஒருவருக்கும் கோபம் வராது.

நேற்று வங்கி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்போது தான் தெரிய வந்தது. கல்விக் கடனுக்கு வட்டி 13 சதவீத்ம் என்றார்கள். வசூலிப்பதிலும் கடுமை காட்டுகின்றார்கள்.

விஜய் மல்லையா 7500 கோடி வங்கிகளுக்குத் தர வேண்டியதிருக்கின்றது. அவர் இல்லையென்றால் அழகிகளின் படம்  கொண்ட  மாதங்காட்டிகள் நமது நாட்டிற்கு யார் தருவார்கள். கிரிக்கெட் குழுவை எத்தனை கோடிக்கு ஏலம் எடுப்பார்.

ஒரு விஜய் மல்லையா மட்டுமா.இன்னும் எத்தனை பேர் எத்தனை கோடி தரவேண்டியுள்ளது. சொல்ல மாட்டார்கள். பொது உடைமை தொழிற்சங்கங் கள் எத்தனை முறை பட்டியலிட்டன.

அவர்களின் எடு பிடிகள் ஆட்சியில் இருக்கையில் அவர்களின் தவறான பொருளீட்டுதலை நம்பி இருக்கையில் என்ன செய்ய இயலும்.

கட்டிடத் தொழில் செய்யும் இளைஞர் கொண்ட ஒரு தலைக் காதல் ஒரு இளம்
பொறியியல் மாண்வியைக் கொடூரமாகக் கொன்றிருக்கின்றது . அவர் தமிழ்ப் பெண். வசதியானவர் இல்லை போலத் தெரிகின்றது.டில்லியில் ந்டந்தால் தான் பாலியல் வன்முறை போலும். இங்கு யாரும் கோபப் படவில்லை.

கொடுமை கொண்டு பொங்குவாய் வா வா வா என்றான் பாரதி

1 மறுமொழிகள்:

said...

அய்யா உங்க கோபம் புரிகிறது ஆனால்என்ன செய்ய இதை எல்லாம் கேட்க தான் ஆள் இல்லை. நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டு இருக்கிறதை தவிர எம்மை போல உள்ள பாமரன் என்ன தான் செய்ய முடியும்