Tuesday, September 17, 2013

கொஞசம் செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி சந்திர பாபு நாயுடு அவர்களுக்கு சொத்து 42 இலட்சம்.அவர் குடும்பத்தினருக்கு 42 கோடி.

தொடர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பதும் குழந்தைகள் கண்களை இழப்பதும் தொடர்கிறது. ஆசிரியர் பணிக்கு கல்வி அளவுகோலை வைத்து மட்டும்  ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதால் வரும் கேடு.


நீதிபதிகள் நியமனம் குறித்து மைய அரசு நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தியது. பொதுமறை தந்த வள்ளுவப் பேராசானின் குறள் சொல்லுகின்றது. சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கணி

கல்வித் தகுதிகளை மட்டும் வைத்து நியமிப்பதனை விட சான்றாண்மை மிக்கவராக அதவது ஒழுக்கத்தில் சிறந்தவர்களா என்று பார்த்து நியமிப்பதென்று முடிவெடுத்தால் நீதித் துறை. உயர்ந்து விளங்கும்

ஆசாராம் ஆசாரத்தை விட்டதனால் ஆசிரமம் ஆகச் சிரமமாகிப் போச்சு.


0 மறுமொழிகள்: