Tuesday, July 12, 2016

எல அவளுக்கு ஒரே ஒரு பொம்பளைப்பிள்ள.இவங்க மெட்ராஸ்ல இருக்கும் போத் அவளுக்கு ஒரு பெரிய காலேஜ்ல கிட்டுப்பிள்ளைதான் சீட் வாங்கிக் கொடுத்தான். நன்றி வேணும்ல நன்றி.

அந்தப் பிள்ளைக்கு ஒரு பெரிய குடும்பத்தில கிட்டுப்பிள்ளதான் மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்தான். பத்து வருசமா வாங்கின சம்பளம் அத்தனையும் அந்தப் பையன் பேங்கில தான் போட்டு வச்சிருந்தான்.அந்தக் கல்யாணத்தையும் கிட்டுப் பிள்ளைதான் பொறுப்பா நடத்தினான்.அந்தக் கல்யாண வீட்டுலயே கிட்டுப்பிள்ளைய அவமானப் படுத்தினா அவங்க அக்கா.அவள்ளாம் என்ன பொம்பளண்ணூ பேச் வந்தே. அவ கேட்டாளாம். இவரு கேக்காராம்.

எல அந்தக் குடிகாரப் பயல பலவேசம் அடிச்சாம்லா.அதுக்குப் பிறகு அந்தப் பய மெட்ராஸ் ஊர்ல சொந்த்க் காரங்க வீட்டுக்குல்லாம் போயிருக்காம். எவம் வாசப்படியிலே ஏத்துவாம். கையில குடிக்கப் பணமுமில்லே.சோத்துக்குக் கூட யார் வீட்டுக்குள்ளேயும் போக முடியல்ல. கடைசியிலே விஷத்தைக் குடிச்சுச் செத்திட்டான்.


சொர்ணத்தக்கா அவ பாணியிலேயே கிட்டுப் பிள்ளை மகன் அடிச்சதிலத்தான் அவன் செத்தான்னு செத்த வீட்டுக்குள்ள எல்லாத்திட்டயும் சொல்லி அழுதிருக்கா. எல்லாரும் கிட்டுப் பிள்ளைட்ட வந்து சொல்லிருக்காங்க. அதுக்குப் பின்னாலே அவ வீட்டு வாசப்படிக்கு எப்படி போவான் கிட்டுப்பிள்ளை. அவம் பிள்ளகள எப்படி வளத்திருக்காம்ன்னு உனக்குத் தெரியும்லால. இத்தனை அயோக்கியப் பயலுவள சொர்ணத்தக்கா தெய்வக்குழந்தைகள்ன்னு வர்ணிப்பா. அவள்ளாம் ஒரு பொம்பிள்ண்ணு பேச வந்திட்டியோ.

எல கிட்டுப்பிள்ளை கூடவே கோயில் கோயிலாப் போயி அவங்க குடும்பம் ஒரு நல்ல காரியத்திற்காக கோயிலுக்குப் போம்போதும் தன் புருஷனைக் கொல்லணும்ன்னு  க்டவுள் எல்லாரையும் கூலிப்படை யாக வேண்டுதல்  வச்சவ என்ன யோக்கியதையில அவன் வரல்லேங்கா.

மன்னிச்சிடுங்க அண்ணாச்சி. தெரியாமக் கேட்டுப் புட்டேம்.

எதையுமே தெரியாமப் பேசாதீங்கடாண்ணு எத்தனை தடவை உங்ககிட்டச் சொல்லி அழுதாலும் இப்படித்தானல பேசிக்கிட்டுஅலையுதீய.


0 மறுமொழிகள்: