Sunday, September 20, 2009

எந்தன் மதம்

பாவங்கள் தீர்ப்பதற்காய் இராமேஸ்வரப்
பவித்திரமாம் தீர்த்தத்தில் குளிப்பார்தம்மை
பாவத்தில் மேலும் ஒன்றைக் கூட்டிக் கொண்டார்
பாவியவர் என்கின்றார் விவேகானந்தக்
காவியுடை வேந்தரவர் மேலும் சொல்வார்
கவனிக்க ஆளற்றுக் கிடக்கும் நாயின்
தேவையதைப் பசியதனை தீர்ப்பதுவே
தெரிகின்ற நல்ல மதம் எந்தன் மதம்

0 மறுமொழிகள்: