Sunday, June 27, 2010

பாட வேண்டும்

செம்மொழிக்காய்க் கவியரங்கம் ஆங்கிலத்தில்
சிறப்பாகப் பாடுகின்றார் பெண்ணொருத்தி
தம்மொழியில் செய்திகளைச் சொல்ல வொண்ணா
தனியாரை ஏன் பாடச் சொன்னார் என்றால்
அம்மையவர் நன்றாகப் புகழுவார் காண்
அய்யாவை அய்யாவை அய்யாவைத் தான்
செம்மொழிக்காய் மாநாடு என்றால் தானே
செந்தமிழை உணர்ந்தார்கள் பாட வேண்டும்

0 மறுமொழிகள்: