Wednesday, March 2, 2011

அன்பு செய்வீர்

வழிபாடு செய்கின்றீர் கூட்டமாக
வகை வகையாய் ஊர் தோறும் வணங்குகின்றீர்
கனிவாக அனைவரிடம் நடக்கும் பண்பைக்
கைக் கொண்டு வாழ்ந்தீரோ நினைந்து பாரும்
துணிவாகத் தீமைகளை எதிர்த்து நிற்கும்
தொண்டுள்ளம் கொண்டீரோ சொல்வீரா நீர்
அணி அணியாய் கோயில்களைச் சுற்றி வரல்
ஆண்டவனுக் கிசைந்ததல்ல அன்பு செய்வீர்

1 மறுமொழிகள்:

said...

ஆண்டவனுக்கு இசைந்தது அன்பு தானென்று ஆணித்தரமாய் உணர்த்திவிட்ட என் ஆசாணே!அன்பே சிவமென்று நம் ஆன்றோர்கள் கூறுகின்ற தத்துவத்தை அன்புசெய்ய அறைகூவலிடும் உமது மனித நேயம் மிளிரட்டும் ! நல்லோரின் வழிகூறும் உமது தத்துவங்கள் வெல்லட்டும் !உமது மாசற்ற உண்மைப் பணி தொடரட்டும்!
திருமூலர்,வள்ளலாரின் முற்போக்கான ஆன்மபணி உயரட்டும் !
அன்புடன்
தமிழ்பாலா