Wednesday, March 9, 2011

ஓசியிலே எல்லாமே கொடுப்போம் அய்யா

மூணு நாளு மூணு நாளு கூத்தை யெல்லாம் - ஆமா
கூத்தை யெல்லாம் ஆமா கூத்தை யெல்லாம் - அய்யா
மொத்த மாகப் பார்த்தவர்க்கு நன்றி அய்யா - ஆமா
நன்றி அய்யா ரொம்ப நன்றி அய்யா
வேணுங்கதைக் வேணுங்கதைக் கொடுத் திட்டாங்க - ஆமா
கொடுத்திட்டாங்க அய்யா கொடுத்திட்டாங்க
வேண்டு மட்டும் வேண்டு மட்டும் எடுத்திட்டாங்க ஆமா
எடுத்திட்டாங்க அய்யா எடுத்திட்டாங்க அவங்க
வீட்டுக் கெல்லாம் சிபிஐ போகாதய்யா ஆமா
போகாதய்யா அய்யா போகாதய்யா நெசம்மா போகாதய்யா
ஒட்டை யெல்லாம் கொண்டு வந்து போடுங்கய்யா அய்யா
போடுங்கய்யா எங்களுக்குப் போடுங்கய்யா நாங்க
ஊழலைத் தான் சிறப்பாக வளர்ப்போம் அய்யா ஆமா
வளர்ப்போம் அய்யா நல்லா வளர்ப்போம் அய்யா - உங்களுக்கு
ஒசியிலே எல்லாமே கொடுப்போம் அய்யா நிறையக்
கொடுப்போம் அய்யா ஆமா கொடுப்போம் அய்யா

ஏய் டண்டணக்கு டண்டணுக்கு டண்டணுக்கு போடு
டண்டணுக்கு போடு டண்டனுக்கு ஆமா டண்டணுக்கு

2 மறுமொழிகள்:

said...

சாதிச் சங்கங்கள் உள்ளவரை-அரசியலில்
சாதீய அணுகுமுறை உள்ளவரை
சாதிக்கொரு தொகுதி என்று ஒதுக்குகிறவரை!
விலைவாசிதனை குறைக்காமலே
இலவசங்கள் என்று அரசினை கடன்கார அரசாய் ஆக்குகிறவரை!
தனியார்க்கு மானியத்தை கொடுத்துவிட்டு
பொதுத்துறைதனையே ஓட்டாண்டியாய் ஆக்குகின்றவரை!அரசாங்கம் தனியார் துறைதனையே ஊக்குவிக்கின்ற வரையினில்!தன் சொந்த காலில் நிற்காமல் அன்னிய ஆதிக்கத்தின் அடிமையாய் நிற்கின்றவரை!
எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எத்தனை அரசுகள் மாறினாலும்
மாறுதல் என்பது வந்திடப்போவதில்லையே!
சொத்துடைமை சமூக அமைப்பு உள்ளவரை இங்கு
சோத்துக்கு இல்லாமை என்பது தொடர்கதையே!@
தோழமையுடன்..,
தமிழ்பாலா

said...

இந்த எழுத்துக் கூட்டங்களை வாசிக்கும்போது யாருக்காவது வயிற்றெரிச்சலுக்கு விளக்கம் கிடைத்தால் யாரும் பொறுப்பல்ல !
பாணேடியன்ஜி