Friday, March 11, 2011

நாம் பொறுப்பல்ல திமுக காங்கிரஸ் கூட்டணி

வள்ளுவரின் சொல்லழகு வியப்பையே அளிக்கும்.

ஆமாம் மானம் குறித்துப் பேசுகின்றார். மயிரை இழந்தால் கவரி மான் உயிரை விட்டு விடும் என்கின்றார்.

அது சரி மனிதர்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார் மனிதர்களும் உயிரை விடுவார்கள்தான்.

ஆனால்

அவர்களுக்கு மானம் வர வேண்டுமே என்கின்றார்

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கும் இந்தக் குறளுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாராவது கருதினால் நாம் பொறுப்பல்ல.

மயிர் நீப்பின் வாழாக் க்வரி மா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

வரின் என்கின்ற சொல்தான் உயிர்