Thursday, March 17, 2011

அம்மையாரின் அரசியல்

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வ்லியும் தூக்கிச் செயல்


செயலின் வலிமையையும் தனது வலிமையையும் தனது
எதிர் நிற்பான் வலிமையையும் தனக்குத் துணையாக இருப்பாரின்
வலிமையையும் நன்கு ஆய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

பெரிய தேர்தான். அது ஒடத் துணை செய்யும் அச்சாணி தேரின் அளவைப் பார்க்கையில் மிக மிகச் சிறியதுதான். அதைக் குறைத்து மதிப்பிடுவது சரியான செயலா.

பொது உடைமை இயக்கங்கள் தே மு தி க ஆகியோரிடம் அம்மையார் நடந்து கொண்டுள்ள விதமும்

நண்பர் வை.கோ.அவர்களை அவர் நடத்திய விதமும் உங்க்ளுக்கு நினைவு வந்தால் நாம் பொறுப்பல்ல.

1 மறுமொழிகள்:

said...

அண்ணா!
வைகோவை; அம்மை நடத்திய விதம் ; மிகக் கேவலம். அவர் ஈழத்தை ஆதரிப்பவர் என்பதை விட அறிவு மிக்கவர் என்ற வகையில் மிக வருத்தம்; இது அறிவுடையோர் யாவருக்குமே விழுந்த அடி!
ராஜகுரு- சோ பின்னால் இருக்கும் வரை வைகோ அம்மையுடன் இருக்க முடியாது.
மக்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்.