Friday, June 24, 2011

நம்மோடும் தமிழரோடும்

பிறப்பாலே கவியரசர் அதனாலே தான் அவர்
பேசி நின்ற வார்த்தை யெல்லாம் கவிதையாச்சு
சிறப்பாகத் தமிழன்னை சிலரை மட்டும்
செருக்கோடு பெற்றுள்ளாள் மனம் விரும்பி
பொறுப்போடு இவர் தந்த கவிதைகளோ
பொதிகை மலை முச்சூடும் மணம் பரப்பும்
இருப்பார் நம் கவியரசர் கண்ணதாசன்
என்றென்றும் ந்ம்மோடும் தமிழரோடும்

0 மறுமொழிகள்: