Saturday, June 1, 2013

என்ன செய்ய

ஒரு முறை ஒரு மிகப் பெரிய கவிஞர் பாரதி விதவைகளைப் பற்றிச் சிந்திக்கவெயில்லை என்று நான் பாரதியைப் பற்றி யாதுமாகி நின்றாய் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழிலேயே எழுதினார். காசியில் விதவைப் பெண்களாக்கப் படுகின்ற கொடுமை கண்டுதான் அவன் பூணூலை அறுத்தெறிந்தான். முண்டாசும் மீசையும் வந்ததே அதனால் தான். பெண்களை ருதுவாவதற்கு முன்னால் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்றான். திருமணம் செய்த பெண் அந்தக் கணவன் பிடிக்கவில்லையென்றால் அந்தக் கணமே விலகி வாழ அனுமதி என்றான். பெண்கள் திருமணமே வேண்டாம் என்கின்றார்களா அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதி என்றான். அவள் ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்க விரும்பினால் அதைத் தடுக்காதே என்றான். ஆண்களோ பெண்களோ விதவைகளாகி விட்டால்  அவர்கள் வயதுக்கேற்ற பெண்களையும் ஆன்களையும் திருமனம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்குள் உடல் இச்சை தீரும் படி ஆண்டவன் மனித் உயிர்களைப் படைக்கவில்லை என்றான்.

பாரதியின் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்கின்ற வரியை வாலி அசிங்கப் படுத்தியுள்ளார்

திரைப் படக் கவிஞர் பா. விஜய் அவர்கள் நக்கீரன் வார இதழில் ஒரு தொடர் எழுதினார் . அந்தத் தொடரில் அவர் விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்று ம்கிஷாசுரமர்த்தினியை வதம் செய்தனர் என்று எழுதினார்.

என்ன செய்ய.


1 மறுமொழிகள்:

said...

சிரித்துக் கொள்ள வேண்டியது தான் - அமைதியாக...