Saturday, August 10, 2013

பசிப்பிணி தீர்க்கும் மருத்துவர்கள்

கிராமங்களில் ஒரு ஆண்டு கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற மைய அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவர்கள் போராடுகின்றனர்.

இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கின்றது என்றார் தேசத் தந்தை.

உழவர்கள் இல்லையெனில் யாருமே இல்லை என்கின்றான் வள்ளுவப் பேராசான்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

வள்ளுவன் இதிலே துறவிகளைக்குறிக்கின்றான் கேலியாக மனிதர்கள் விழைவதை எல்லாம் தாங்கள் விட்டு விட்டதாகச்  சொல்லுகின்ற(விடவில்லை) துறவிகள் கூட தெருவிற்கு வந்து விடுவார்கள் பசிப்பிணியால் என்கின்றான்.
குடியரசுத் தலைவர்கள் அமைச்சர் பெருமக்கள் விஞ்ஞானிகள் அறிஞர்கள் கவிஞர்கள் எழுத்தாள்ர்கள் மருத்துவர்கள் பொறியியல்  நிபுணர்கள் கலைஞர்கள்  எல்லோரும் பசிப்பிணியால் மரணத்தைச் சந்திப்பார்கள் என்கின்றார்.

அவர்கள் இருக்கின்ற இடங்களுக்குப் போவதையே கேவலமாகக் கருதுகின்றனர் நம்து பெரிய படிப்புப் படித்த மருத்துவர்கள்.

பசிப்பிணிதான் உலகத்திலேயே கொடுமையான பிணி அதனைத் தீர்க்கின்ற உழவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல மாட்டேன் என்று கூறுகின்ற இவர்களை என்ன் செய்ய.

அதுவும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான். எளிமையான மருத்துவ முறைகள் உழவர்களிடம்தான் இருக்கின்றன். பக்க விளைவுகளற்ற அந்த மருத்துவத்தில் அவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று நமது மருத்துவர்கள் கருதுகின்ற்னர் போலும்..சேவைக்கான கல்வியும் பணம் சார்ந்த்தான அவலம் இதில் தெரிகின்றது

0 மறுமொழிகள்: