Thursday, August 15, 2013

விடுதலை நாள்

இன்று விடுதலை நாள் இந்தியத் தலைமையமைச்சர் மாநில முதல்வர்கள் அனைவரும் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுகின்றனர்(கறுப்புப் பூனை பாதுகாப்போடு).ஆனால் அந்த மேடைகளில் நின்றுகொண்டு நம்மை பாதுகாப்பதில் அவர்கள் எப்படியெல்லாம் இது வரை செயல்பட்டார்கள் இனிமேல் செயல்படப் போகின்றார்கள் என்பதையெல்லாம் தங்கள் உரைக்ளில் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் கொடியேற்றுகின்றனர். எந்த நேரம் மாற்றப் படுவோம் என்பதனையே தெரிந்து கொள்ள முடியாதவர்களாக.

வெள்ளையன் விதைத்த விஷ் விதையில் மத  மோதல்களில் நவகாளி பற்றி எரிந்த போது எந்த விதப் பாதுகாப்புமின்றி அங்கே  சென்றார் தேசத் தந்தை காந்தியடிகள். பாதுகாப்பிற்கு அனுப்பப் பட்ட ராணுவம் வெளியேறிய பிற்கே.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதிஷ் குமார் தமிழக முதல்வர் மூவரும் அடுத்த பிரதமர் வேட்பாளர்கள்.

தி மு கவின் மிக மூத்த தலைவர்கள் இருக்கும் இடத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை திமுக் உறுப்பினர்களுக்குத் தலைவராக அறிவிக்கப் பட்டிருக்கின்றார்.

சோனியா அம்மையாரின் மருமகன் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார். அது குறித்து அவர் வெட்கப் பட்டதாகவும் தெரியவில்லை. வாய் திறப்பதாகவும் தெரியவில்லை.

சபர்மதி ஆசிரமத்தில் விதி முறைகளை மீறி மாலை ஆறு மணிக்கு மேல் தனது மகனுக்கு உணவளித்த் க்ஸ்தூரிபாய் காந்தியையும் மகனையும் இரவோடு இரவாக ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினார் காந்தி மகான்..

பெற்ற தாய் ஒரு 50 ரூபாய் அதிகம் கேட்டும் தர ம்றுத்தார் காமராஜர் எனும் மாமனிதர்.

அரியலூர் ரயில் விபத்து நடந்த உடனேயே அமைச்சர் பதவ்யை ராஜினாமா செய்தனர் அன்றைய அமைச்சர்களான் லால் பகதூர் சாஸ்திரியும் அழகேசனும்.

சுப்ரமணிய சாமி பாஜகவில் சேர்ந்து விட்டார் அவரைத் தொடர்ந்து எடியூரப்பாவும் சேரப் போகினறாராம்.

அரசியல் சூதுகளை உணர்ந்தவுடன் முதல் அமைச்சர் பதவியைத் துறந்து வடலூர் சென்று சொத்துகள் அனைத்தையும் சன்மார்க்க சங்கத்திற்கு எழுதி வைத்து விட்டு பின்னர் அரசியல் பக்கமே திரும்பாமல் வாழ்ந்தார் ஒமந்தூரார்.

குறுகிய காலத்தில் கோடீஸ்வரார்களானவர்களெல்லாம் மத்திய மைச்சர்கள் மாநில அமைச்சர்களாகி விடுகின்றனர்.

ஏழைகள் மட்டும் ஏழைகளாகவே வாக்களிப்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சாதி மதத் தலைவர்களோ சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆந்திராவிலும் கேரளத்திலும் வடநாடுகளிலும் விஜயின் தலைவா படம் திரையிடப் பட்டு விட்டது.. தமிழ்ப்படம் தான். இது வரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழ்ப் படம் தமிநாட்டில்  திரையிடத் தடை. புரியவில்லை.

விட்டு விடப் போகுதுயிர் விட்டு விட்ட உடனே உடலை
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்

என்கின்றார் பட்டினத்துப் பிள்ளை




0 மறுமொழிகள்: