Sunday, November 16, 2008

என்ன சொல்வேன்

மலைகளுக்குள் செல்லுகின்றேன் இறைவன் அவன்
  மகத்துவத்தை உணருகின்றேன் மரங்கள் கொண்ட
  இலைகளையே போர்வையென கொண்டு வாழும்
  எழில் கண்டு மயங்குகின்றேன் பறவைக் கூட்டம்
  அலை அலையாய்ப் பறக்கின்ற அழகும் மீண்டும்
  அழகுறவே வந்தமரும் கிளையும் கண்டேன்
  நிலையற்ற இவ்வாழ்வில் நெஞ்சம் தன்னை
  நிறைக்கின்ற இயற்கையினை என்ன சொல்வேன்

0 மறுமொழிகள்: