Saturday, November 1, 2008

இறந்து போனார்

  கக்கனென்ற ஒரு மனிதர் ஏழைகளைக்
  காப்பதற்காய் அமைச்சரென வாழ்ந்திருந்தார்
  தக்கவராய் வாழ்ந்திருந்தார் மக்கள் சொத்தைத்
  தனக்கென்று ஆக்காமல் வாழ்ந்திருந்தார்
  எக்கணமும் நேர்மையுடன் வாழ்ந்திருந்தார்
  ஏழ்மையுடன் இறுதி வரை வாழ்ந்திருந்தார்
  வக்கணையாய் இன்று செல்வம் சேர்ப்போர் எல்லாம்
  வாழ்வாரா இருக்கையிலே இறந்து போனார்

2 மறுமொழிகள்:

said...

தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறாமல் பெட்டி வாங்காமல் வாழ்ந்தார் என்பதையும் சேர்த்து கொள்ளலாம் தமிழ்கடல் அவர்களே.

said...

இன்று வாழ்ந்திருந்தால் என்ன பாடுகள் பட்டிருப்பாரோ ....