Tuesday, October 28, 2008

உயர்ந்தோங்கட்டும்

 குடி ஒழிக்க முயல்வாரே ஏழைகளின்
  குடும்பத்தைக் காக்க வந்த நற்றமிழர்
  அடிமைகளாய் ஏழைகளை ஆக்கி மீண்டும்
  அழிப்பதற்கு முயல்கின்றார் தமிழரில்லை
  தடி மனத்தார் ஏழைகளை நினைப்பதில்லை
  தன் குடும்பம் தனை மட்டும் நினைக்கின்றாரே
  குடிக்கின்ற ஏழைகளைத் திருத்துவாரின்
  குடும்பங்கள் என்றென்றும் உயர்ந்தோங்கட்டும்

0 மறுமொழிகள்: