Thursday, October 9, 2008

வழியேயில்லை

 எழுதி விட்ட எல்லாமே எழுத்து என்றால்
  எத்தனை பேர் எழுதியுள்ளார் நின்றதில்லை
  பழுது பட்ட மனத்தோடு எழுதுவதும்
  பார் பெரியன் நான் என்றே தனக்குத் தானே
  விருதுகளைச் சூட்டுவதும் வியந்து தன்னை
  வெற்றிகளின் மன்னன் என்று போற்றுவதும்
  கருதி நின்றால் அவர் தன்னைப் பார்த்து நெஞ்சில்
  கழிவிரக்கம் கொள்வதன்றி வழியேயில்லை
   

1 மறுமொழிகள்:

said...

"எழுதி விட்ட எல்லாமே எழுத்து என்றால் எத்தனை பேர் எழுதியுள்ளார் " மிகவும் சரியா வரிகள். உண்மை தான் நாம் எழுதும் எழுத்துக்களின் ஒவ்வொரு சொற்களும் மற்றவர் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும் நல்ல வழியில்... அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு பெருமை. -வவுனியாவில் இருந்து இலங்கேஸ்வரன்.ச