Wednesday, October 15, 2008

வாழ்க நன்று

 ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாதென்று
  ஊர் முழுக்க அனைவரையுமே திட்டித் தீர்க்கும்
  பெருமை மிகு அறிஞர்களில் சில பேர் இன்று
  பேசுகின்றார் பேசுகின்றார் வாய் கிழிய
  அருமை அவர் கருத்தொன்றே என்றவரே
  அறிவிப்புச் செய்கின்றார் அந்தோ பாவம்
  சிறுமை என்று உணராமல் அனைவரையும்
  சீண்டுகின்றார் மன நோயால் வாழ்க நன்று

0 மறுமொழிகள்: