Friday, October 3, 2008

தண்டிப்பானே

அன்பு ஒன்றே எம்மதமும் சொல்லும் வழி
  அறிந்தவர்கள் மதம் கொண்டு அலைய மாட்டார்
  பண்புணர்வார் மனித இனம் உயிர்கள் எல்லாம்
  படைத்தவனின் பேரருளே என்றுணர்வார்
  கண்ணிருந்தும் குருடரைப் போல் நடிக்கும் பலர்
  கண்ணியத்தை மறந்தவராய் அலைகின்றாரே
  விண்ணவனாம் இறைவன் இவர் தம்மையெல்லாம்
  விரும்புவனோ தண்டிப்பான் தண்டிப்பானே

0 மறுமொழிகள்: