Monday, October 27, 2008

எந்நாள்

 வீதியிலே இருப்பார்க்கும் வாக்குரிமை
  விரைந்திங்கு வழங்குகின்றார் வெட்கமின்றி
  நாதியற்று இருக்கின்ற அவரை இந்த
  நாட்டாரென்று உறுதி செய்யும் வேலை அதாம்
  சாதியென்றால் ஏழையவர் அவரைக் கூட
  சாதிக்குள் இழுப்பதற்கு முயற்சி செய்வார்
  பேதித்து அனைவரையும் ஒழித்து வாழும்
  பேதையர்கள் வீழ்கின்ற நன்னாள் எந்நாள்

1 மறுமொழிகள்:

said...

நாதியற்று இருப்பவர்கள் நாசமாக மதுவினை நாடாமல் இருக்கும் நாளே
அந்த நன்னாளாம் ஐயா!

அவனின் சிந்தை தெளிவு பெறக் கூடாதென்ற ஆளுமைக் கூட்டம் தெருவோர மதுபானகக் கடைகளை திறந்தே விட்டுகின்றததே!
எங்கே அவன் சிந்தித்தித்து விடுவானோ என்ற அச்சத்தில் இப்போதெல்லாம் மலிவு விலையில் மதுவாம்.
மலிவு விலை அரசி சரி! மலிவு விலையில் டாஸ்மார்க் சரக்கு?????????