Thursday, October 16, 2008

கூட்டமாமோ

  ஒடுகின்ற காரணத்தால் சாக்கடையும்
  உய்ய வைக்கும் ஆறு எனக் கூறிடுமோ
  பாடுகின்ற காரணத்தால் காக்கை கூட
  பார் நான்தான் குயில் என்று வியந்திடுமோ
  ஆடுகின்ற காரணத்தால் கழுதை தன்னை
  அழகு மயில் என்றெண்ணி ஆர்த்திடுமோ
  கூடுகின்ற மனிதர்களே கூறிடுங்கள்
  கூடுகின்ற கூட்டமெல்லாம் கூட்டமாமோ

0 மறுமொழிகள்: