Monday, October 6, 2008

அந்தோ அந்தோ

 என் மனைவி என் பிள்ளை என் குடும்பம்
  என்றெங்கும் வாழ்வாரின் மனத்தை அன்றே
  சின்னதொரு கடுகு எனச் செப்பி நின்றார்
  சீராகப் பாரதியின் தாசனாரும்
  மன்னவர்கள் அதையெல்லாம் மறந்தாராகி
  மக்களைத்தான் ஏய்க்கின்றார் தாசனாரின்
  வண்ணமிகு கவிதையெல்லாம் மேடை தோறும்
  வாய் கிழியச் சொல்லுகின்றார் அந்தோ அந்தோ

0 மறுமொழிகள்: