Monday, October 27, 2008

விழாக்கள் அன்று

 வெடிகள் வெடிக்கின்றீர் வெடிகள் செய்த
  விரல்களுக்கு வெடி போட வாய்ப்பே யில்லை
  துணிகள் உடுத்துகின்றிர் துணியை நெய்த
  தூயவர் தம் குடும்பம் அங்கு உடுத்தவில்லை
  அடிமை விலங்கறுத்தீர் என்ற போதும்
  அழுகின்றார் துன்பம் இன்றும் தீரவில்லை
  கொடிகளுக்காய் தைத்த அந்தத் துணியையெல்லாம்
  கொடுத்திருந்தால் பல ஏழைக் காடையாகும்


  நான் என் குடும்பம் என்று வாழுகின்ற
  நலமற்றோர் ஆளுதற்கு வந்த பின்னர்
  தேனாறும் பாலாறும் அவர்கள் வீட்டுத்
  திண்ணை தாண்டி வெளியினிலே வருவதில்லை
  ஊனளித்து உயிரழித்து வீழ்ந்தோர் தம்மின்
  உறவெல்லாம் உணவின்றி வாடுகின்றார்
  தான் மட்டும் வாழ்வதற்காய் வாழுகின்ற
  தருக்கர் இனம் வீழ்ந்தால் தான் விழாக்கள் அன்று

0 மறுமொழிகள்: