Thursday, October 2, 2008

தலைவனும் வழி நடந்தோனும்

  அடித்தாலும் உதைத்தாலும் சுட்டாலும் கொன்றாலும்
  அப்படியே அதை ஏற்று செய்வான் தன்னின்
  மனத் தளத்திற்குள்ளேயே போராட்டம் உண்டாக்கி
  மனிதனென அவன் தன்னை மாற்றி விடும்
  பொறுப்பான போராட்டம் அகிம்சையென்னும்
  பொலிவான நீரோட்டம் தந்த அண்ணல்
  சிறப்பெல்லாம் அவனான காந்தி அண்ணல்
  சிந்தை வழி நடந்திடுவோம் உலகம் போற்ற


  படிப்பதனை சிறு வயதில் இழந்தவன்தான்
  பல பேரைப் படிக்க வைத்தான் உயர வைத்தான்
  வடித்திட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றும்
  வாழ வைத்துக் காத்திருக்கும் தமிழினத்தை
  அடி பட்டு வீழ்ந்திருக்கும் ஏழையரை
  அவனன்றோ காத்து நின்றான் தாயெனவே
  மடிப் பிச்சை அவன் ஏற்றான் ஏழையர்க்காய்
  மாமனிதன் காமராஜர் வழி நடப்போம்

0 மறுமொழிகள்: