Monday, October 6, 2008

அவர் பெரியார்

 மனிதர்களை மனிதர்களாய்ப் பார்த்தல் விட்டு
  மதம் சாதி இனம் என்று பிரித்து வைத்த
  கனிவற்ற மனிதர்களை எண்ணி எண்ணி
  கவலையுற்று நிற்கின்ற நல்லார் தம்மை
  சரியாகப் போற்றாமல் அவரைக்கூட
  சாதி எனும் குறி கொண்டு திட்டித் தீர்த்தல்
  அறிவானார் செயல் அன்று வேறு என்ன
  அறியாமல் செய்கின்ற பிழையே ஆகும்


  நான் சொன்னால் சொன்னது தான் என்று என்றும்
  நாயகராம் பெரியாரும் சொன்னதில்லை
  ஏன் என்று கேளுங்கள் சொன்னதெல்லாம்
  எப்படித்தான் என்று நீங்கள் சிந்தியுங்கள்
  நான் சொன்னேன் என்பதற்காய் நம்ப வேண்டாம்
  நல்ல விதம் சிந்தித்து முடிவெடுங்கள்
  தான் என்று அகம் கொண்டு பெரியார் என்றும்
  தனித்துவத்தைக் காட்டுதற்கு முயலவில்லை

2 மறுமொழிகள்:

said...

வணக்கம் அய்யா உங்களது பாக்கள் அருமையாக உள்ளது. மதங்களில் நம்பிக்கையுள்ளவர்களின் நெஞ்சிலும் தந்தை பெரியார் உள்ளார். வாழ்த்துக்கள்.

www.aazhikkarai.blogspot.com

said...

அருமையாக உரைத்தீர்கள் ஐயா!