Saturday, August 8, 2009

இராமகிருஷ்ணர் நல் மொழிகள்

ஞானத்தை அடைந்து விட்டார் மீண்டும் வந்து
நானிலத்தில் பிறப்பதில்லை எவ்வாறென்றால்
ஆன நெல்லை என்றைக்கு அவித்தீரோ நீர்
அதன் பின்னர் அது விதையாய் ஆவதில்லை
ஞானமதைப் பெற்றவரும் அவ்வாறேதான்
நானிலத்தில் எவ்வாறு வருவார்கள் தான்
ஊனமெல்லாம் விட்டொழியும் பிறப்பறுக்க
உண்மை ஞானம் இறையருளால் பெற்று விடும்

0 மறுமொழிகள்: