Sunday, August 9, 2009

இராமகிருஷ்ணர் நல்மொழிகள்

உருகுகின்ற வெண்ணெயதும் உருகும் வரை
ஒசை செய்யும் உஸ் என்று சத்தமிடும்
உருகி அது நெய்யானால் அமைதி கொள்ளும்
உயர் ஞானம் அடைந்தாரும் அவ்வாறேதான்
சிறு வண்டும் மலரினிலே அமரும் வரை
சீராக ரீங்காரம் செய்தே ஆடும்
மருவில்லாத் தேனருந்தும் நேரந்தன்னில்
மெளனம் தான் அதுவேதான் ஞானம் ஆகும்


அதிகமான தேனருந்தி விட்டதென்றால்
ஆகிவிடும் ரீங்காரம் அதிகமாக
அது போல நெய்யதனில் பூரி செய்தால்
அது சத்தமிடும் பூரி போடும் தோறும்
விதம் விதமாய் வாழுகின்ற மனிதருக்கு
விரி ஞானம் கொண்டார்கள் கீழிறங்கி
பதப் படுத்த இது போல வருவதுண்டு
பக்குவமே கொண்டவர் தம் பொறுமையாலே

1 மறுமொழிகள்:

said...

நல்ல பதிவு ஐயா...பல நல்ல தகவல்களை அறிந்தேன் மகிழ்ச்சி..நன்றி